search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேடர் ஒதுக்கீடு"

    ஐ.ஏ.எஸ்.. ஐ.பி.எஸ். பணிகளில் கேடர் ஒதுக்கீட்டு முறையை மாற்ற மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. #CentralGovt
    புதுடெல்லி:

    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 26 குடிமைப் பணிகளுக்கு யூ.பி.எஸ்.சி. தேர்வு நடத்துகிறது.

    தற்போது இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகும்போதே பணி மற்றும் கேடர் ஒதுக்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஐ.ஏ.எஸ்.. ஐ.பி.எஸ். பணிகளில் கேடர் ஒதுக்கீட்டு முறையை மாற்ற மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

    புதிய முறைப்படி 100 நாள் அடிப்படை பயிற்சிக்கு பிறகு பணி, கேடர் ஒதுக்கீடு செய்யும் முறையை அமல்படுத்த முடிவு செய்யப்படுகிறது. எந்த மாநிலத்தில் சேவையாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வது கேடர் எனப்படுகிறது.

    100 நாள் பயிற்சியின் போது எடுக்கும் மதிப்பெண்கள், பணி, கேடர் ஒதுக்கீட்டு கணக்கில் கொள்ளப்படும். இந்த புதிய முறையால் முறைகேடு நடைபெற வாய்ப்பு உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர். #CentralGovt
    ×